Thursday, September 17, 2015

திரைக்கதை எழுதுவது ஒரு கலை அல்ல அது தொழில்நுட்பம் III Screen play is not an art but Technology III

திரைக்கதை எழுதுவது ஒரு கலை அல்ல அது தொழில்நுட்பம் III 

பேசும் வசன-பட காட்சி எப்படி இருக்கும் ?


முந்தைய  அத்தியாயத்தில்  "IIM-B கல்லூரி  வளாகத்துள் விடுதியில் வாழும் கார்திக் அதே கல்லூரி வளாக பெண்கள் விடுதியில் வாழும் அவனது சினேகிதியை காலையிலேயே காண விரும்புகிறான். " அதனை ,அந்த காட்சியை வசனம் இன்றி  திரைக்கதையாக்கினோம் அல்லவா? அதே காட்சியை  எம் ஜி ஆர் ,சிவாஜி காலத்து   டைரக்டர்கள்  காட்சி படுத்தினால் எப்படி இருக்கு என்று பார்ப்போமா? 

காட்சி 1 வெளி காலை 
Fade In 

[1]கார்திக் காலையில் கல்லூரி வளாக ரோட்டில் நடந்து வருகிறான். செல்போனை எடுக்கிறான்.சினேகிதியை அழைக்கிறான்.....ரிங்டோன்... மீண்டும் மீண்டும் செல்போனில் அழைகின்றான்.   [லாங் ஷாட் ] 

[2] சிநேகிதி போனை எடுத்தஉடன்  போனில் [மிட்லாங்ஷாட்]

              கார்திக் : ஹாய் சிவசங்கரி குட்மார்னிங் ... எப்படி இருக்க? 
             
[3] இண்டர்கட் பெண்கள் விடுதி அறையில் 
              சிவசங்கரி: குட் மார்னிங் கார்திக்... எழுந்திட்டேன் ... 5 மினிட்ஸ் பா வெயிட் பண்ணு 

[4] இண்டர்கட் சாலையில் 
            கார்திக்  : நேத்து டான்ஸ் புரோகிராம் டயர்ட் ஆ... இன்னும் தூக்கமா? 

[5]   இண்டர்கட் பெண்கள் விடுதி அறையில்                     
             சிவசங்கரி: இல்ல கார்திக் இதோ வந்துட்டேன்....

[6] அதிகாலைக்காண சூரியன், மீண்டும் பணி மூட்ட காட்சி ,மரம் செடி கொடிகள் [ஜூம் செய்யபடும் ஷாட்கள்]

Dissolve 


பேசி பேசியே பழகிப்போன தமிழர் ரசிக்க  மனதுக்கு  சினிமாவிற்கான மொழியை ,காட்சி படுத்தும் கலையை, பழகிக்கொள்ள  சில கால அவகாசம்    தேவைப்படும் என்பது உண்மையாயினும்  , அத்தகைய நிலைக்கு ரசிகர்களின் மனம் தள்ளப்படுதவற்கு  டைரக்டர்களின் பங்கும்,   பயிற்றுவிப்பும் மிகவும் முக்கியமானது. ஒரு காட்சியை திரைக்கதையாக எழுதும் போது ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகளில் எழுதிப்பார்ப்பது என்பது சிறந்த திரைக்கதை எழுதுவதற்கான முறையாகும். சமிபத்தில் எனது  அபிமான டைரக்டர் பார்திபனின் ஒரு பத்திரிக்கை செய்தியில் " இப்போது இணையத்தில் அருமையாக திரைக்கதையை எழுதிக்கொண்டு இருகின்றார்கள்..... நான் கூட எனது  திரைக்கதையை எழுதி எழுதி கிழித்து கிழித்து எறிந்து விட்டு மீண்டும் மீண்டும்  சிறப்பாக எழுத முயற்சிக்கிறேன். " என்று கூறியதன் அர்த்தம் என்ன? செந்தமிழும் நா பழக்கம்   நல்ல திரைக்கதையும் கை பழக்கம் என்பது தானே?    

தொடரும் .....

previous Chapters :

http://vansunsen.blogspot.in/2015/09/i_17.html
http://vansunsen.blogspot.in/2015/09/ii-screen-play-is-not-art-but.html

           


      

No comments: