Friday, March 13, 2015

நெடுங்கதை - துல்லிய தேசம் Henry Ford Story

நெடுங்கதை - துல்லிய தேசம் 

அத்தியாயம் I 

கரும்பூர் கிராமம் ,அருகாமையில் மறைமலைநகர் நகராச்சியில்  , செங்கல்பட்டு வட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் என்கின்ற ஊரில் வாழும் வானதி சரவணனாகிய நான் கூறுவது யாது எனில்

"

எங்க வீட்டுக்கு பக்கத்தில் உள்ள உலகில் விலையுயர்ந்த கார் கம்பெனியின் கிடங்கின் நீலநிற உலோக கூரைகள், அதன் பக்க தடுப்புகள் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகின்றன. முன்பொரு  காலம் இப்படி தான் நெல்லும் ,கருனைகிழங்க்கும் விளைந்த கீழக்கரனை நிலம்   எங்களை துரத்தியது..., வாழ்விழந்து போனோம். நான்கு ஏக்கர் நன்செய் நிலமும் ,கிணரும் , பம்பு செட்டும் கைவிட்டு போனது.சுதந்திரத்துக்கு முன் வெள்ளைக்காரன் எங்களை போன்ற ஏழை பாழைளுக்கு  ,தலித் மக்களுக்கு விவசாயம் செய்ய கொடுத்த      நத்தம் புறம்போக்கு நிலமெல்லாம் நாம சுதந்திரம் அடைந்து சரியாக அம்பதாவது வருடம் வெள்ளைக்கார ஹென்றி போர்டு  கம்பெனிக்கே ரொம்ப கொரஞ்ச விலையில் பறிபோனது.அந்த மண்ணின் மீது எனக்கென்று ஒரு ஆசையும் இருந்தது. அப்பாவுக்கு வரும் பங்கில் நான் படித்த மருந்தாளுனர் B.Pharm  படிப்பை வைத்து கவர்மண்ட் லோன் வாங்கி சின்னதா இரும்பு சத்து டானிக் செய்யும் கம்பெனி ஆரபிக்கலாம் என்று பிளான் செய்தேன். ஹும் என்ன செய்ய இப்ப எல்லாம் போய் பிரஞ்சுகாரர் நடத்தும் இரும்பு சத்து கம்பெனியிலேயே  தர கட்டுப்பாட்டு அதிகாரியா வேலை செய்துகிட்டு இருக்கேன். ஆமாம் நம்ம கனவெல்லாம் கறைக்கப்பட்டாலும் , வாழ்வே நடுத்தெருவுக்கு வந்தாலும் ஏதோ வாழ்ந்து தானே ஆகணும். என் வலிகளை எல்லாம் குறைக்க ஒரு கவிதையாவது எழுத எனக்கு உரிமையுள்ளது அல்லவா ?

"வானத்து மீன்களாய் நாங்கள்" 

அன்று விண்மீன்கள் உலவும் இரவில் 

நிலவொளியில்  எங்கள் கழனிக்கு அருகில் 

ஓடையில்  சலசலக்கும் மீன்களை 

வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தோம்.

இன்று  ஹென்றி போர்டின்  தொழில்சாலை இட்ட 

முற்றுகை சுவரின் தாகத்தில் 

கீழக்கரனை கிராமத்தில் முள்ளிவாய்க்காலாக 

முடங்கி போனோம் "





"

தொடரும் 

No comments: