Friday, March 13, 2015

நெடுங்கதை – துல்லிய தேசம் அத்தியாயம் 3 Henry Ford Story

நெடுங்கதை – துல்லிய தேசம்
அத்தியாயம் 3
நேற்று கூட ஹென்றி போர்ட் கார் கம்பெனியில் வேலை செய்து வெளியேற்றப்பட்ட ஒரு தம்பியை பார்த்து பேசினேன். வாடிய முகத்துடனும் , சவரம் செய்யப்படாத முகத்துடனும் இருந்தாரு. மறைமலை நகரில் நாங்க வாடகைக்கு இருந்த வீட்டுக்கு பக்கத்தில் தான் நண்பர்களுடன் வீடு எடுத்து தங்கி போர்டில் வேலைக்கு போய்கொண்டு இருந்தாரு. என்னுடைய கணவருக்கு அவர் நல்ல அறிமுகம் ஆனவரு. நாங்க வீடு கட்டி கரும்பூருக்கு வந்த பின்னால அவரை பார்த்தது இன்று தான். அவரிடம் நான் மறைமலை நகர் நூலகத்தில் பேசிய பேச்சின் சாராம்சம் இது தான் …
” மறைமலை நகர் ஹென்றி போர்ட் கார் கம்பெனியில் 10%க்கும் குறைவானவர்களே நிரந்தர தொழிலாளர்கள். மீதி இருக்கிற தொழிலாளர்கள் எல்லாம் ஒரு வருட அக்ரிமண்டில் வேலையில் இருகின்றவங்க. அதுவும் மாத சம்பளம் ரூ 7,500 மட்டும் தான் ஒரு வருடம் கழித்து மீண்டும் வேற வேலை தேடியாகனும். அல்லது சொந்த ஊரு தேனிக்கே போயாகனும். ”
மறைமலை நகர் ஹென்றி போர்ட் கார் கம்பெனியில் வேலை செய்யும் தம்பி ,தங்கைகளை அவர்களின் நீல நிற சீருடையில் நான் பார்த்த போது எல்லாம் ஒரு காலத்தில் பெருமை பட்டுக்கொள்வேன். ஆனா இப்ப இவரு சொல்லும் ஒரு வருட அக்ரிமண்ட் ,ரூ 7,500 மாத சம்பளம் என்பதை கேட்டபின்னால மனசு கொதிச்சு போச்சு. நினைத்து பார்த்தாலே ஒருபக்க தலை வலிதான் வருது . நாம மருந்து கம்பெனி கட்டிஇருந்தா கூடகுறைந்த சம்பளமாக ரூ 10,000கொடுத்து இருக்க முடியும். ஆனா ஹென்றி போர்ட் கார் கம்பெனி மொதலாளிங்க இப்படி அடிமாட்டு சம்பளம் கொடுத்து நம்ம மக்களை தத்தளிக்க விடறாங்களே !மனசுக்குள்ள இவனுங்களை, அமெரிக்க மொதலாளிகளை திட்ட நெறைய கெட்ட கெட்ட வார்த்தையா வருது. ஆனா பொம்பள பிள்ளை இல்லையா வெளியே எப்படி சொலுவது. தூத்தேரி ஒருநாளைக்கு அமெரிக்காவில் $120 சம்பளம் கொடுக்கும் இதே கம்பெனி, ஆனா $4 சம்பளம் தான் இந்தியாவில் கொடுகிராங்க . என்ன கொடுமை இது ? ஒரு நாள் சம்பளம் ரூ 250 ல் என்ன செய்வாங்க நம்ம பிள்ளைகள் ?
தொடரும்

No comments: