Tuesday, September 9, 2014

திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் காட்சி #3 Screen Play for the Movie Siva-karthikeyan scene #3

திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் 

By K.Senthilkumaran 

 காட்சி #3 : காலை 4 மணி INT @ வேளச்சேரியில் உள்ள அப்பர்ட்மெண்ட்,பிளாட் 

 

போலிஸ் ஜீப்பில் வரும் அதிகாரி ,சிவ-கார்திகேயன்கள் ,செக்யூரிட்டி கதவை திறக்க உள் நுழைகின்றனர்.

கீழே இறங்கும் அதிகாரி "surveillance camera இருக்கா ?" என்று கேட்கின்றார்.

"இருக்கு மேடம் ஆனா பயன் படுத்துரது இல்லை " என்கின்றான்.

சிரித்துக்கொண்டே "Middle Class idiots" என்கின்றார்.

தூங்கும் குழந்தையை வலது கையில் வைத்துக்கொண்டு அனுபவபட்ட அப்பா போல கதவை திறப்பவனை பார்த்து " குழந்தையை கொடுங்க " என்று போலிஸ் அதிகாரி கூற சிரித்துக்கொண்டே கதவை திறக்கின்றான்.

உள் நுழையும் அதிகாரி living room மற்றும் மூடியுள்ள இரு அறைகளையும் நின்றவாறே பார்வை இடுகின்றார். நேரே living room க்கு பின் பக்கம் சமையல் அறை.இடப்பக்கம் இரு படுக்கை அறைகள்.

குளிர்சாதன பெட்டியை திறந்து ஆவின் பால் பாக்கெட்டை எடுக்கும் கார்த்திகேயன் "மேடம் குழந்தைக்கு ஆவின் பால் கொடுக்கலாமா ..., ஒத்துக்குமா என்று கேட்கின்றான்.

சிரித்துக்கொண்டே "யாருக்கு தெரியும் ...அதன் அம்மாவிடம் தான் கேட்க வேணும் " என்றவள்
"குழந்தைக்கு ஒரு வயசு இருக்குமா ? இன்னும் நடக்கல இல்லையா ?" என்கின்றார்.

1 க்கு 2 என்று பாலும் ,நீரும் கலந்து கொதிக்க வைத்தவன் ,சக்கரை கலந்து இரண்டு ஆற்று ஆற்றி அப்படியே பெரியவர்கள் குடிக்கும் சூட்டில் குழந்தைக்கும் கொடுக்க போனவனை பார்த்து " பாவி மக்கா இந்த சூட்டில் கொடுத்த என்ந்த்துக்கு ஆகும் ?" என்றவள் சக்கரை போடாமல் மறுபடியும் பாலை எடுத்து இளம் சூடு வரும்வரை நன்கு ஆற்றி வாயில் உற்றிப்பார்த்து "சூடு வெத வெதனு இருக்கு கொடுங்க என்றவள் சக்கரை போட்டு ஆற்றாத பாலை தான் குடிக்கின்றாள்.

பாலை உடலில் வழிய குடிக்கும் குழந்தை வயிறு நிறைந்த உடன் ஒருகட்டத்தில் பாலை வாயில் இருந்து ஓசையுடன் spray செய்து அவனை பார்கின்றது. இருவரையும் பார்க்கும் அதிகாரி நமுட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டு தொலைகாட்சி பெட்டியை ரிமோட் மூலம் on செய்ய செய்திகள் ஓடிக்கொண்டு உள்ளது.

"நேற்று இரவு இந்திய நேரப்படி 11.45க்கு மலேசிய விமானம் உக்ரைன் ,ருஷ்ய நாட்டு எல்லையில் சுட்டு வீழ்த்தபட்டது... அதில் பயணம் செய்த இந்தியர்கள் 7 பேர் பலி..... விபத்தில் பலியான தமிழ் நாட்டை சேர்ந்த சிவசங்கரி ஐயர் அவர் தந்தை கனேஷ் ராம்  பற்றி உறவினர்கள் கண்ணிர்பேட்டி....... " 

காட்சி #3 முற்றும்

 

No comments: