Tuesday, September 16, 2014

திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் காட்சி #14 பின்னணி காட்சி X Screen Play for the Movie Siva-karthikeyan scene #14 Flashback Scene X

காட்சி #14: பின்னணி காட்சி காட்சி X : மாலை 4.15 மணி EXT @ IIM -B உள் சாலை
திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் 
By K.Senthilkumaran


கார்திகேயன்,சிவசங்கரி தொலைவில் நடந்து வரும் காட்சி


அருகாமையில் .....

"என்ன கார்த்திக் ஏன் இப்படி டென்ஷன் ஆகிற ? ரிலாக்ஸ் பா " என்று கூறி அவன் தோள்களை தன் இடது கையால் மெல்ல பற்றியவளை ....

கார்திகேயன் தன் தோள் பட்டையை மெல்ல நெகிழ்த்தி விடுவித்துக்கொண்டு நடக்கிறான்.

அவனுடன் நடக்கும் சிவசங்கரி "நான் நேத்து evening போன் செய்தேனே ! ..... உன்னிடம் permission வாங்கிட்டு தான் பா egg donate செய்யனும்னு இருந்தேன்...நீ தூங்கிட்ட பா " என்கின்றாள்.

எவ்வித உணர்சிகளையும் காட்டாத கார்திகேயன் மேலும் நடக்கிறான்.
"இல்ல பா தாமரை என்னேட close frind தெரியுமா ? அவ பாவம் பா " என்று சோகமான முகத்துடன் கூறுகின்றாள்.
எவ்வித உணர்சிகளையும் காட்டாத கார்திகேயன் மேலும் நடக்கிறான்.

அவன் பேசாமல் நடப்பதை கண்டு கோபமுற்ற சிவசங்கரி "இதுல என்ன தப்பு இருக்கு கார்த்திக் ? blood donate செய்வது போல தானே இதுவும் ? என் உயிரையே காப்பாத்தியவளுக்கு நான் இது கூட செய்யக் கூடாதா ? " என்று கூறி அமைதியாகிறாள்.அவள் கண்கள் கலங்குகின்றன.

தூரத்தில் எங்கோ பார்வையை செலுத்தி "கரு முட்டையை தானம் கொடுக்க அவங்களுக்கு relations யாருமில்லையா ?" என்கின்றான்

"" donate செய்ய relations இருக்காங்களா இல்லையானு தெரியல கார்த்திக் ..... ஆனா என்னிடம் தாமரை கேட்டப்ப நான் சரி தறேனு சொன்னப்பவே உன்னை நினைத்து பார்க்காதது.... ,உன்னிடம் பேசி முடிவெடுக்காது தவறு தான் I am very sorry கார்த்திக் " என்று கூறி அவன் வலது கையை தன் இடது கையால் பற்றுகின்றாள்.

தன் கையை மெல்ல விடுவித்துக்கொண்டவன் அவள் முகத்தை, கண்களை உற்று நோக்கி .....,

" உனக்கு செக்குக்கும் சிவலிங்கலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாதா சிவா ?"
என்று கேட்க...

அதிர்ந்து போனவள்.....

" நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்னனு திட்டுறியா ..., நான் என்ன நாயா பா ? [அழுகை] நாம என்ன சாதி, சமுகம் எல்லாம் பார்த்தா காதலிக்கின்றேம் ....,.marriage செய்துக்க போறேன் ? என்னை உன்னோட share செய்துக்க முடியும் போது என் friend க்காக நான் ஒரு கரு முட்டையை donate செய்ய  கூடாதா ? "

என்று கூறி அழுதவள் அவர்கள் நடந்த திசைக்கு எதிர் திசையில் வேகமாக நடக்கின்றாள்

தன்னை விட்டு விலகி எதிர் திசையில் செல்லுபவளை பார்த்து

"சிவசங்கரி நில்... நான் சொல்லாததையும் நீயா கற்பனை செய்து கொண்டு கோபப்படுவது என்ன நியாயம்"

என்று கூறியவாறே அதிர்ந்து போய் சிலையாக நிற்கின்றான்.

இருவரும் எதிர் எதிர் திசையில் நடப்பதை காட்சி படுத்த .....
காட்சி #14: பின்னணி காட்சி காட்சி X முற்றும்
[வாசகர்கள் இக் காட்சிக்கு கண்டிப்பாக விமர்சனம் வைக்கவும்]

No comments: