Wednesday, September 10, 2014

திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் காட்சி #11 பின்னணி காட்சி VII Screen Play for the Movie Siva-karthikeyan scene #11 Flashback Scene VII

காட்சி #11: பின்னணி காட்சியின் உள் மற்றும் ஒரு காட்சி பின்னணி காட்சி VII : இரவு 10.15 மணி INT @ சென்னை சிவசங்கரியின் வீடு , சிவசங்கரியின் படுக்கை அறை,பள்ளி கூடம் ,வகுப்பு அறை 


தனிமையிலே இனிமை காண முடியுமா ? என்ற பாடல் கணினியில் இசைத்துக்கொண்டு இருக்க .....

சிவ சங்கரி தன் சிறு வயது பள்ளி நினைவுகளில் முழ்கிபோகின்றாள் [பின்னணியில் பாடல் low volume ல் ஒலிக்கின்றது ]

5 ஆம் வகுப்பு அறையின் வெளியே உணவு இடைவேளையில் அருகருகே அமர்ந்து இருக்கும் தோழிகள் : சிவசங்கரி மற்றும் தாமரை

உணவை பகிருகின்றார்கள்.

பள்ளியின் வெளிதோற்றம் long shot

வகுப்பறையின் வெளிதோற்றம் long shot

"நானும் இப்ப எல்லாம் முட்டை கூட சாப்பிடுறது இல்லை தெரியுமா... சங்கரி" என்கின்றாள் தாமரை

"ஏன் என்னாலையா பா" என்கின்றாள் சிவசங்கரி

"இல்ல பிரிண்ட்ஸ்காக எதையாவது ஒன்னை விட்டு கொடுத்தா தானே அது பிரிண்ட்ஸ்ஷிப்...சங்கரி" என்கின்றாள் தாமரை

"அப்ப நானும் உனக்காக முட்டை சாப்பிடட்டுமா பா " என்கின்றாள் சிவசங்கரி

"வேண்டாம் உங்க வீட்டில் திட்டுவாங்க அதனால நானே சாப்டாம இருக்கேன்" என்ற தாமரை கை கழுவ எழுந்து நிற்க மேல் இருந்து சரிந்து விழும் கட்டிட சாரத்தின் சவுக்கு கட்டைகளை பார்க்க அதிர்ந்தவள்

தன் தோழியை , சிவசங்கரியை தர தர வென்று இழுத்து நகர்த்தி காப்பாத்துகின்றாள்
காட்சி #11: பின்னணி காட்சியின் உள் மற்றும் ஒரு காட்சி பின்னணி காட்சி VII முற்றும்

----------------------------------------------------------------------------------------
காட்சி #11-A : பின்னணி காட்சியின் உள் மற்றும் ஒரு காட்சி பின்னணி காட்சி VII-A : மாலை 4.45  மணி INT சிவசங்கரியின் வீட்டு வாசல்

சென்னை சிவசங்கரியின் வீட்டு வாசல் ...... [பின்னணியில் பாடல் low volume ல் ஒலிக்கின்றது ]

பள்ளியில் இருந்து வீடு வரும் சிவசங்கரி தன் காலில் உள்ள சிராய்ப்பு காயத்தை பார்த்தவாறே shoe வை கழற்றுகின்றாள்.

சிவசங்கரியின் அம்மா காயத்தை கானுகின்றார்."என்னடி இது எங்க விழுந்து வாரிட்டு வர..." என்கின்றார்.

"இல்ல.. மா... தாமரை என்ன தர தரனு பிடிச்சி இழுத்துட்டா தெரியுமா "

"அவங்க கூட சேராதனுசொன்னா கேட்டியா நீ "

"இல்ல மா மேல இருந்து சாரம் விழுந்துதா அப்ப தான் என்னை இழுத்து காப்பாத்தினா மா "

மனம் நெகிழும் அம்மா சிவசங்கரியை கட்டி அனைத்துக்கொண்டே நாளைக்கு "அவளை வீட்டுக்கு கூட்டிகிட்டு வாடி" என்கின்றாள்.

"என் பிரண்டு எனக்காகவே முட்டை சாப்பிடாம நிறுத்திட்டா... நாளைக்கு அவளுக்கு கேக் வாங்கி தரட்டுமா மா?"

காட்சி #11-A : பின்னணி காட்சியின் உள் மற்றும் ஒரு காட்சி பின்னணி காட்சி VIII-A முற்றும்

------------------------------------------------------------------------------------------------------
காட்சி #11-B: பின்னணி காட்சியின் உள் மற்றும் ஒரு காட்சி பின்னணி காட்சி VII-B : மாலை 4.45  மணி INT பள்ளி கூடம் ,வகுப்பு அறை 


சிவ சங்கரி காலையில் தன் சிநேகிதி தாமரைக்கு ரோசா பூவை கொடுத்துகொண்டே , 
"அம்மா இன்னிக்கு உன்னை கூட்டிக்கொண்டு வர சொன்னாங்க தாமர " 
என்கின்றாள்.

"சரி பா வறேன் " என்கின்றாள்  தாமரை


"என் உயிரையே காப்பாத்தி இருக்க ..., திருப்பி நான் என்னப்பா செய்ய போறேன் ? " 

என்றவாறே தாமரையின் நோட் புக்கில் " உன்னால் தானே இன்று நான்உயிருடன் ...என்று எழுதுகின்றாள் 


" சரி math home work முடிச்சிட்டியா கொஞ்சம்கொடு  ......" என்னும் தாமரையை பார்த்து 



math home work  நோட்டை நீட்டிய வாறே " இல்லை தாமர நான் ஏதாவது உனக்கு செய்யனும்........ எதுவா இருந்தாலும்  என்கிட்ட கேளு என்ன ?" என்று கூறுகின்றாள்  



-----------------------------------------------------------------------------------------
பிளாஷ்பேக் cut
"அப்பா நாளை காலை flightல் பெங்களுருக்கு ticket book செய்துடார் " என்ற அம்மாவின் குரல் கேட்டு நிகழுக்கு வருபவள் அணிச்சையாக தன் உடைகளை சரி செய்து கொண்டே படுக்கையில் இருந்து எழுந்து வந்து லிவிங் ரூமுக்கு செல்கின்றாள்
-----------------------------------------------------------------------------------------


[தனிமையிலே இனிமை காண முடியுமா ? என்ற பாடல்
ஆண்:
தனிமையிலே..தனிமையிலே
தனிமையிலே இனிமை காண முடியுமா
பெண்:
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா
தனிமையிலே இனிமை காண முடியுமா
ஆண்: துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா
பெண்: அதை சொல்லி சொல்லித் திரிவதனால் துணை வருமா
ஆண்: துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா
பெண்: அதை சொல்லி சொல்லித் திரிவதனால் துணை வருமா
பெண்:
மனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா
மனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா
வெறும் மந்திரத்தால் மாங்காய் வீழ்ந்திடுமா
(தனிமையிலே… தனிமையிலே இனிமை காண முடியுமா)
பெண்:
மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை
செங்கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை
மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை
செங்கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை
கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமையில்லை
கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமையில்லை
நாம் காணும் உலகில் ஏதும் தனிமை இல்லை
(தனிமையிலே… தனிமையிலே இனிமை காண முடியுமா)
பெண்:
பனி மலையில் தவமிருக்கும் மா முனியும்
கொடி படையுடனே பவனி வரும் காவலரும்
கவிதையிலே நிலை மறக்கும் பாவலரும்
கவிதையிலே நிலை மறக்கும் பாவலரும்
இந்த அவனியெல்லாம் போற்றும் ஆண்டவனாயினும்
(தனிமையிலே… தனிமையிலே இனிமை காண முடியுமா)]

No comments: