Saturday, June 21, 2014

vinavu conflicts and Wrong replaysவினவை நோக்கி நான் கேட்ட கேள்வியும் வினவு செய்யும் அவதூருகளும்

ம க இ க தோழர்ளீன் முரண்பாடுகளும் ,அவதூருகளும்

வினவை நோக்கி நான் கேட்ட கேள்வியும் வினவு செய்யும் அவதூருகளும் ::

அஜித்தின் தத்துவம் – அண்ணாச்சியின் நாக் அவுட் !,ஓடு “தலைவா” ஓடு – பாகம் 3 வரை விமர்சனம் செய்ய நேரமும் ,மனசும் இருக்கும் வினவுக்கு தலித்தியர் மக்களீன் எழுத்துகளை பற்றி விமர்சனம் செய்ய நேரமும் மனசும் இல்லாமைக்காக சுய விமர்சனம் [Self-criticism]செய்து கொள்ளுமா ?

இக் கேள்விக்கு ஒன்று வினவு கொள்கை நேர்மையுடன் பதில் அளித்து இருக்க வேண்டும் அல்லது வழக்கம் போல் கண்டும் காணமலும் சென்று இருக்க வேண்டும்.

அதை விட்டு அவர்கள் செய்து உள்ள அவதூருகளை பாருங்கள் :

[1]தலித் இளைஞர்கள் சினிமா மாயையில் சிக்கி சீரழியட்டும் என்ற உங்களது வன்மம் கண்டிக்கப்படவேண்டியது. இது போதையில் இளைஞர்கள் சீரழியட்டும் என்று ஆளும் வர்க்கம் நினைப்பதற்கு ஈடானது.

[2]…….எகத்தாளத்துடன் கேட்டதற்கு நீங்கள்தான் சுயவிமரிசனம் ஏற்க வேண்டும்.

[3]நீங்கள் நாலு நாவல்கள் படித்து விட்டால் உங்களுக்கு முக்கியம் என்று தோன்றிவிட்டால் உலகமே அதை அங்கீகரிக்க வேண்டும் என்பது நிச்சயம் மேட்டிமைத்தனமாக அணுகுமுறை

[4]நீங்கள் படித்ததை மற்றவரும் படிக்கலாம் என்று ஆலோசனை கூறலாமே தவிர, இதையெல்லாம் ஏன் நீ படிக்கவில்லை என்று குதிப்பது சரியா? தலித் மக்கள் கூட இத்தகைய இலக்கியங்களை படிக்கும் வாய்ப்பற்றவர்கள். அதனால் அவர்களும் அதற்கு எதிரானவர்கள் என்று கத்துவீர்களா?

[5]தலித் இலக்கியம், பாட்டாளி வர்க்க இலக்கியம், மார்க்சிய அழகியல் எது குறித்தும் உங்களுக்கு எதுவும் தெரியாது. தெரியாது என்பதை புரியுமளவு உங்களுக்கு பணிவோ, கற்கும் ஆர்வமோ கிடையாது. மாறாக அதை யாராவது சுட்டிக் காட்டினால் உடனே கம்பையெடுத்து தீர்ப்பு கொடுக்க துடிக்கிறீர்கள்!

தென்றல் அவர்கள் செய்து உள்ள அவதூருகளை பாருங்கள் :

[6]சோ போன்ற எதிரிகள் அ.மா போன்ற பிழைப்புவாதிகள் கருத்துக்களை நைச்சியமாக தந்திரமாக வைக்கிற பொழுது அவர்களிடம் நாம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் சரவணன். சோ, அ.மா போன்று குழந்தை பால்குடிக்கும் பொழுது குறுக்கே புகுந்து முலை அறுக்கிற வகையறாக்கள் அல்லர் தாங்கள். அதனால் தான் அவர்களை எதிரி, பிழைப்புவாதி என்று அடையாளங்கண்டு உங்களை அற்பவாதி என்கிறார் சுகதேவ். என் பார்வையிலும் இது அற்பத்தனம் தான் சரவணன். நேர்மறையில் பரிசீலியுங்கள்.

இவ்வாறு எல்லாம் நீங்களும் எம்மை அவதூரு செய்ய மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன் உங்களீன் விவாதத்தை கூர்மை படுத்தும், செழுமையான கேள்விகலுக்கு பதில் அளிக்க போகிறேன்

No comments: