Sunday, June 22, 2014

Answer to sukdev in vinavu I சுகதேவ் அவர்களுக்கு

சுகதேவ் அவர்களுக்கு ,

[0]மார்சிய சித்தாந்தத்தை பொருத்த வரை பிரசனைகளுக்கு தீர்வு தான் கூறப்பட்டு உள்ளது. ஆதங்கத்துக்கோ , வெற்று பூலம்பல்களுக்கோ மார்சிய-லெனிய கோட்பாட்டில் இடம் இல்லை. என் கேள்விகள் உங்களுடைய வெற்று ஆதங்கத்தால் எழுப்பபட்டவை. முடீந்தால் மார்சிய-லெனிய கோட்பாட்டின் படி பதில் அளீக்க முயலுங்கள் 

//அண்ணே! தூங்குபவனை எழுப்பலாம்; தூங்குவது போல நடிக்கும் உங்களை எழுப்ப முடியாது. ஏற்கனவே நடைமுறையில் இருந்த சிறந்த நடைமுறை ஒன்று இன்று ஒழிக்கப்பட்டதன் பிரச்சினையை மட்டுமே தெரிவித்தேன். அந்த நடைமுறை ஒழிக்கப்பட்டது குற்றம் என்று சொல்லவில்லை. அந்த பழைய நடைமுறை வாணக்காரய்யாவின் அணுகுமுறை போன்று சமூக நல்லிணக்கத்தை வளர்ப்பதாக இருந்தது என்பது தான் நான் கூறிய உதாரணத்தின் மெசேஜ்.//

[1]அந்த ஆட்டத்தையும் ஆடித்தான் பருங்கள் சுகதேவ் ! ஆட்டத்தின் இருதியில் மார்க்ஸிய சித்தாந்தத்தையும் இழந்து அம்பல பட்டு போவது யார் என்று வினவு வாசகர்கள் உணர்ந்து கொள்ள உதவும். 

//உங்கள் கருத்துக்கள் தலித்தியத்துக்கு காவடி தூக்குகிறது என்ற முன்முடிவுடன் அவற்றை வசதிக்கேற்ப வெட்டி, திரித்து உங்களை மார்க்ஸிய விரோதியாக சித்தரிக்க முடியும். ஆனால், அது சில்லறை விளையாட்டு. விபரீத முடிவுகளுக்கு இட்டுச் செல்லும். உண்மையை சொல்லப்போனால், உங்கள் கருத்துக்கள் எதனையும் படிக்க எனக்கு ஆர்வமில்லை. //

[3]இனி இது போன்ற தனி மனித அவதூறுகளுக்கு [Defamation] உதிர்த ரோமம் அளவுக்கே மதிப்பு கொடுப்பேன் என்பதை சுய விமர்சனமாக கூறிகொள்கின்றேன். முடிந்தால் நீங்களும் விவாதம் சார்ந்த கருப்பொருளுக்கே முக்கியத்துவம் கொடுங்கள் 

//நீங்கள் ஒரு ஆசிரியர் என்று நண்பர் ஒருவர் சொன்னார். உங்கள் மாணவர்கள் உங்கள் கருத்துக்களை படிக்க நேர்ந்தால் அவர்கள் உங்களை குறித்து என்ன நினைப்பார்கள் என்பதை தயவு செய்து ஒருமுறை கற்பனை செய்து கொள்ளுங்கள். அவர்கள் காலணிகளை ஒருமுறை அணிந்து கொண்டு நீங்கள் பதிக்கும் கருத்துக்களை ஒருமுறை படித்துப் பாருங்கள். என்னுடைய ஆசிரியர்கள் யாரிடமும் மிகக் கீழ்மையான விவாத அணுகுமுறையை நான் கண்டதில்லை. எனவே இந்த விளையாட்டை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்.//

No comments: