Friday, January 24, 2014

பசு வதை சட்டம் cow slaughter act

1]இந்தியாவில் பசு வதை சட்டம் எல்லா மாநிலதிலும் ஒரே மாதிரியாகவா உள்ளது ?
ஏன் இந்த மாறுபாடு? பல்வேறு மொழி, வெவ்வேறு இனம், வெவ்வேறு பண்பாடு உள்ள மக்கள் நாம் அல்லவா !! மக்கள் தங்கள் சம்பிரதாயப்படி மாட்டு இறைச்சியை சாப்பிட அல்லது சாப்பிடாமல் இருக்க உரிமை உண்டு அல்லவா ?
[2]இந்து மத உணவு வழக்கங்கள் பன்முக பட்டது அல்லவா ! தமிழ் நாட்டில் மாட்டுக்கறி உண்ணும் ஹிந்து, காஷ்மீரில் மாட்டுக்கறி உண்பது இல்லை அல்லவா !! கேரளாவில் மிக பெரும்பான்மையான ஹிந்து மக்கள் மாட்டுக்கறி உண்ணும் மக்கள் அல்லவா ?ஏன் ஹிந்து மக்களிடமே இந்த மாறுபாடு? ஏன் என்றால் உணவு பழக்கம் என்பது நமது தட்பவெப்ப நிலை , வேலை தன்மை, உணவு கிடைக்கும்தன்மை ஆகிய காரனிகளை சார்தது.
[3]நீங்கள் ஒரு குறிப்பிட்ட உணவு பழக்கத்தை உங்கலுக்காக தடை செய்ய விரும்பினால்,நாம் எப்படி மற்ற மக்களையும் கட்டாயப்படுத்த முடியும்? நமது இந்திய அரசியலமைப்பு சட்ட படி, நாம் நமது சொந்த உணவு,உடை,கலாச்சாரதை,பழக்கத்தை பின்பற்ற உரிமைகள் உண்டு அல்லவா !!
[4] மிகவும் சட்ட திட்ங்கள் கடுமையாக உள்ள சிவப்பு சீனாவில் கூட உணவு விசயதில் இந்த கட்டுபாடு இல்லையே ! நாம் குப்பை உணவு [junk food],சிகரெட் இவற்றை தடை செய்ய வேண்டுமா அல்லது ……!
[5]நாம் பசு வதை சட்டதை ஹிந்து மக்களுக்காக நடைமுறை படுதினால்…,முஸ்லிம் மக்களுகாக பன்றி வதை சட்டதையும், புத்த மற்றும் ஜைன மக்களுக்காக அனைத்து விலங்கு வதை சட்டதையும் நடைமுறை படுத்த வேண்டும் அல்லவா? சட்ட மோதல்[conflict of law] ஏற்படும் அல்லவா ?
[6]இந்த உலகத்தில் எந்த நாட்டிலாவது இத்தனை இனம் ,மதம் ,மொழி பேசும் மக்கள் உள்ளார்களா ? இந்தியாவில் ஒரே மொழி ,ஒரே மதம், ஒரே இனம் என்ற கோட்பாடு இந்தியாவில் சாத்தியமா ?
சாத்தியமாக்க முயன்றால் நாடு பிரியாதா ?ரத்த ஆறு ஓடாதா?
[7] இவை என் சிந்தனை மட்டும் அல்ல, ஆனால் என் ஆழ்ந்த கவலையும் தான்.இந்தியாவின் வரலாற்றை திரும்பி பார்த்தால் மதம் சார்ந்த போர்களும்- படுகொலைகளும் ,இன மோதல்களும் மிக்க அச்சத்தை எனக்கு உண்டாகுகிறது.
அன்புடன்,
கி.செந்தில்குமரன்

No comments: