Sunday, January 26, 2014

கரித்தாள் தெரியவில்லாயா தம்பீ கட்டுரைகள் – பெருமாள் முருகன்[விமர்சனம்-5]( Carbon paper You do not know -Perumal Murugan -Essays-Critic-5 )

கரித்தாள் தெரியவில்லாயா தம்பீ கட்டுரைகள் – பெருமாள் முருகன்[விமர்சனம்-5]( Carbon paper You do not know -Perumal Murugan -Essays-Critic-5 )

ஐயா பெருமாள் முருகன் ,

கரித்தாள் தெரியவில்லாயா தம்பீ கட்டுரைகள் – பெருமாள் முருகன் [விமர்சனம் தொடர்கின்றன] 

23 கட்டுரைகள்  உள்ள  இப்புத்தகம் கடந்த 20 ஆண்டுகள் தமிழகத்தின்   சமுக-அரசியல்  நிகழ்வுகளை  மிக  நூட்பமாக  ஆய்துள்ளது.

"உள்ளது  கொண்டு  உண்ணுதல் "  கட்டுரை எம் கொங்கு மக்களின் [நான்  வாழ்த மல்லசமுத்திர வாழ்க்கையை  மறக்க  முடியுமா ?] எளிய  உணவு முறைகளை அவற்றின்  வட்டார  வழக்குச்சொற்களுடன்  அறிமுகப்படுத்துகின்றது.திரு பெமு  வின்  கருத்துருக்கள் :

[௧]மக்களின்  உணவுமுறை ,அவர்கள் வாழும் நிலம் ,பொருளாதார  வலிமை சார்தது.[இக்கட்டுரையில் ,கொங்கு மக்கள்   "வீட்டுக்கு   வெளியே" தனி பாத்திரத்தில்  "பெரியாட்டுக்கறி" சமைக்கும்  அழகியல்  விடுபட்டு  உள்ளது ] 

[௨]ஆண்டானும்,அடிமையும்  ஒரே  மாதிரியான    உணவுமுறைகளை  பெரும்பாலும்  கொண்டு உள்ளனர். [இன்று இருவருமே ரேசன்  அரிசியை  தானா  சமைத்துண்கின்றனர்  ?]

[௩]குக்கர்  இல்லாமல்  ,கஞ்சி வடிக்காமல் சோறு  ஆக்கும்  முறை [எரிபொருள்  சேமிப்பு ]

[௪]கொங்கு மக்களின் "அரிசி-பருப்பு"  சோறு செய்முறை [அரிசி-மாவுச்சத்து ,பருப்பு-புரதம் நன்று. ; எம் கொங்கு மக்கள் இத்துடன்  ஏதோ ஒரு காய்கறி[விட்டமீன்]  சேர்தால் மிக்க நன்று ] 

[௫]"விக்கவிக்கத்  தின்னாலும் கெழக்க வெளுக்கப்  பீதான்"  என்ற     கொங்கு வட்டார பழமொழியுடன் முடியும் இக்கட்டுரை,  பெரு-சிறு நகர, நடுத்தர-உயர்நடுத்தர மக்களின்  ஆடம்பர-சக்கை   உணவுமுறைகளுக்கு எதிராக   நல்ல  மாற்று  வழியை  விவாதிக்கின்றது. 

முற்றும்

அன்புடன் ,
கி.செந்தில்குமரன்

No comments: